ஹவுரா-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது – 13 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற பூர்வா ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.

கான்பூர் அருகேயுள்ள ஹவுராவிலிருந்து புதுடெல்லிக்கு புர்வா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பிரக்யராஜ்ஜியத்தில் இருந்து புறப்பட்ட ரயில் ரூமா நகர் வழியாக செல்லும் போது எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 12 பெட்டிகள் தடம் புரண்டதில், 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்பு படையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக கிழக்கு ரயில் பாதையில் இயங்கும் டெல்லி ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணித்தவர்கள் பேருந்தின் மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version