அசாமில் பேருந்தின் அடிப்பகுதியில் பற்றிய தீ உரிய நேரத்தில் எச்சரித்ததால் மாணவர்கள் 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்

அசாமில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் அடிப்பகுதியில் எரிந்த தீ குறித்து பொதுமக்கள் உரிய நேரத்தில் எச்சரித்ததால் பள்ளி மாணவர்கள் 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் பகாமதியில் பள்ளி பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தின் அடிப்பகுதியில் சிறியளவில் தீப்பிடித்து எரிந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஓட்டுநரை எச்சரித்தனர்.

இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது தீ வேகமாக எரிய துவங்கியதால் 8 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் உரிய நேரத்தில் எச்சரித்ததால் பேருந்தில் பயணித்த 40 மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

Exit mobile version