நித்யானந்தா நாட்டிற்கு எவ்வாறு விசா பெற வேண்டும்: வைரலாகும் அஸ்வினின் ட்வீட்

நித்யானந்தாவின் கைலாச நாட்டிற்கு செல்வதற்கு எவ்வாறு விசா பெறுவது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா ஈக்குவடார் அருகே சிறிய தீவை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அதற்கு தனிநாடு அந்தஸ்து கோரி ஐநா சபையை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நித்யானந்தாவின் தனிநாட்டிற்கு விசா பெறும் நடைமுறைகள் என்ன என கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்வினின் இந்தக் கேள்விக்கு டுவிட்டர் வாசிகள் தங்கள் பாணியில் பதிலளித்து வருகின்றனர். அஸ்வினின் இந்த டுவிட்டர் இணைய வாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version