உடற்பயிற்சி செய்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற வேண்டும்- ஆர்யா

உடற்பயிற்சி செய்பவர்கள் தகுந்த ஆலோசனைகளையும், உணவு பழக்கங்களையும் கடைபிடித்தால் உடல் நலனை பேணிக்காக்கலாம் என நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

சென்னை நொளம்பூரில் நவீன உடற்பயிற்சி கூடத்தை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, இன்றைய இளம் தலைமுறையினர் உடற்பயிற்சி செய்ய தொடங்கிய குறுகிய காலத்திற்குள் உடற்கட்டு வரவேண்டும் என்ற ஆசையில் இருப்பது தவறு என்று கூறினார்.

Exit mobile version