திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரனின் உடலுக்கு ராணுவ மரியாதை

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த தமிழக வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

ஜம்மு, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 41 பேர் வீரமரணமடைந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த இருவர் மரமணமடைந்தனர்.

டெல்லியில் ராணுவ மரியாதைக்கு பிறகு தனி விமானம் மூலம் இருவரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரனின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தமிழக வீரர்கள் இருவரின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமானநிலையம் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமானநிலையம் வந்தது. அங்கு, சி.ஆர்.பி.எப் வீரர் சுப்ரமணியன் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

Exit mobile version