எல்லையில் ஊடுருவ முயன்ற பாக். ராணுவ வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலையில் அதிரடியாக சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தான் ராணுவ உடையில் இருந்த அவர்கள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே நவ்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலை முறியடித்துள்ள இந்திய பாதுகாப்புப் படையினர், தற்போது ஊடுருவல் முயற்சியையும் முறியடித்துள்ளனர்.

Exit mobile version