எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடத்திய சொந்த ஊர் மக்கள்

அண்மையில் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, சொந்த ஊர் மக்களால் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எழுத்தாளர் ராமகிருஷ்ணன், மொழி தெரியாத இடங்களில் எத்தனை விருதுகள் வாங்கியிருந்தாலும், எனது சொந்த மண்ணில் சொந்த மக்கள் முன்னிலையில் நடக்கும் பாராட்டு விழா தனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

Exit mobile version