சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் வரும் 22 முதல் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலைகல்லூரியில் வரும் 22-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பொருளியில், கணிதம், காட்சி தொடர்பியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 ரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 2 ரூபாயும் விண்ணப்ப கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க மே 6 ஆம் தேதி கடைசி நாளாகும். மே 20 மற்றும் 21 ம் தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version