கிருஷ்ணகிரி அருகே கொடூர இரட்டை கொலை

வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ததால்,பெற்ற மகளையே கை கால்களை கட்டி ஆற்றில் வீசி கொலை செய்த தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நத்தீஷ். இவர் சுவாதி என்ற இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நத்தீஷ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், சுவாதி வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி தங்களது திருமணத்தை பதிவு செய்தனர். இருவரும் ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நிலையில், சமாதானம் பேசலாம் என சுவாதி வீட்டார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இருவரையும் கர்நாடக மாநிலம் மாண்டியா அழைத்துச் சென்ற சுவாதி உறவினர்கள் நத்தீசை அடித்துக் கொன்று, காவிரி ஆற்றில் வீசியதோடு, சுவாதியை உயிருடன் கை கால்களை கட்டி அவரையும் ஆற்றில் வீசியுள்ளனர்.இருவரது சடலங்களையும் கைப்பற்றிய கர்நாடக போலீசார், சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேசன், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version