மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும்

வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை வரும் ஜீன் மாதம் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version