இடைக்கால பொதுச்செயலாளருடன் அண்ணாமலை சந்திப்பு!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும்  ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version