அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி கைது

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த சின்னசாமி, பத்து ஆண்டுகளாக அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக பதவி வகித்திருந்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.  அண்ணா தொழிற்சங்க பேரவையின் தலைவராக இருந்த போது சின்னசாமி நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Exit mobile version