வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக விலங்குகள் பாதிப்பு

வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வன விலங்குகள் நீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய மலை பெய்யாத காரணத்தால், கோடை காலம் துவங்குவதற்கு முன்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன. கோவையின் மேட்டுபாளையம் , சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதிகளில் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு , மரங்கள் காய்ந்து போயுள்ளன. இதனால் யானைகள், மான்கள், காட்டெருதுகள் என அனைத்து வன உயிரினங்களும் தாகம் தீர்க்க நீராதாரங்களை தேடி அலைகின்றன. எனவே, வனத்துறையினர் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் செயற்கையாய் தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் நீர் நிரப்பும் பணியில் இறங்கியுள்ளனர்.

Exit mobile version