ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கும்ப்ளே மீண்டும் நியமனம்

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிகெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் கும்ப்ளே, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்கள், மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறினார்.

Exit mobile version