கடலுக்கு சென்ற படகில் திடீர் தீ-சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் நிலை என்ன???

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு திடீரென
தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
image
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பட்டினம் கடற்கரை பகுதியில் இன்று காலை சென்னையை சேர்ந்த 9 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்களின் படகு எரிவாயு கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து படகில் இருந்த சென்னையை சேர்ந்த 9 மீனவர்களை மீட்டனர். மேலும் படகு தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version