கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

கோவையில் யானை தாக்கி இரண்டு நாட்களில் மற்றொரு நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புறநகர் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு போளுவாப்பட்டி வனச்சரகத்திற்க்கு உட்பட்ட தாணிக்கண்டி என்ற இடத்தில் நஞ்சன் என்பவர் ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த யானை ஒன்று நஞ்சனை தாக்கியது. இதில் நஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சமீபத்தில் கோவை தடாகம் பகுதியில் யானை தாக்கி வனத்துறை சிறப்பு செயலாக்க அலுவலர் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், தொடர் யானை தாக்குதல்களால் கோவை புறநகர் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version