பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய அமமுக பிரமுகர்

திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் ஒருவர் பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டவராயன்பட்டியைச் சேர்ந்தவர் பையா கார்த்தி. அமமுக கட்சியை சேர்ந்த இவர், கடந்த 9-ம் தேதி தனது பிறந்த நாளை ரவுடி கும்பலுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது, பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். இவர் மீது திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, கண்டவராயன்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மணல் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் விதமாக அமமுக கட்சியை சேர்ந்த பையா கார்த்தி மற்றும் ரவுடிகளை பிடிக்க திருப்பத்தூர் காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version