நாடாளுமன்றத் தேர்தலுடன் அமமுக தான் முதலில் காணாமல் போகும்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் அமமுக, காணாமல் போகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கலில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தனர்.

இவ்விழாவில், அதிமுக நிர்வாகிகள், மற்றும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் காணாமல் போகும் என்ற தினகரனின் அமமுக தான் முதலில் காணாமல் போகும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version