விவசாயிகள் கடன் ரூ.4.5 கோடியை அடைத்த அமிதாப் பச்சன்

ஆயிரத்து 398 விவசாயிகளின் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் வங்கிக் கடனை அடைத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், தான் பிறந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், கடன் பிரச்சனையால் கஷ்டப்படும் விவசாயிகளின் துயரைப் போக்கும் வகையில் அவர்களின் வங்கிக் கடன்களை அவரே ஏற்று அடைத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஆயிரத்து 398 விவசாயிகளின் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் வங்கிக்கடனை அவர் அடைத்துள்ளார். அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ள 70 விவசாயிகளை தேர்ந்தெடுத்து மும்பை வருவதற்கு ரயில் முன்பதிவும் செய்துகொடுத்துள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிராவை சேர்ந்த 350 விவசாயிகளின் கடனை அமிதாப் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version