அமிர்தசரஸ் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் சன்மானம்

அமிர்தசரஸ் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் அட்லிவால் கிராமத்தில் உள்ள நிரன்காரி பவனில் தீவிரவாதிகள் வெடிக்குண்டு தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் நேரில் பார்வையிட்டார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கும் அவர் ஆறுதல் கூறினார். இதனிடையே அமிர்தசரஸ் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

 

 

Exit mobile version