நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். குமரகவுண்டன்வலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் மற்றும் உடனிருந்தவர்கள் நோயாளியை இறக்கி வெளியேறினர். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Exit mobile version