கூட்டணி கட்சியினர் கோஷமிட்டதால் பரபரப்பு !

கடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த தமிழ் புலிகள் கட்சியினர், தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை புறக்கணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, திமுகவை சேர்ந்த அமைச்சர் ரகுபதி வந்தார். அப்போது தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் ரகுபதியை முற்றுகையிட்டு திமுகவிற்கு எதிராக கோஷங்களை
எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேர்தல் பரப்புரைக்கு சென்ற அமைச்சர் பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினார். திமுக கூட்டணிக்குள் இருக்கும் குழப்பம், வீதிக்கு வந்து சந்தி சிரிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version