ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே

கஜா புயல் காரணமாக எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட திருச்சி, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக மாறியது.புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.

நேற்று காலை கரைக்கு வந்த புயல், பெரும் சேதத்துடன் நேற்று மாலைக்கு பிறகு முழுவதுமாக கரையை கடந்தது. இதைத் தொடர்ந்து, புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த 9 விரைவு ரயில்கள் மற்றும் 14 பயணிகள் ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version