சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்

தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரிடம், பிரதமர் மோடி விளக்கம் அளித்தநிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று மாலை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி நடைபெற்ற கூட்டத்தில், விமானப்படை தாக்குதல் மற்றும் இந்திய பாதுகாப்பு குறித்து அனைத்து கட்சியினருக்கும் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, டி. ராஜா உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version