விமானப்படை தளத்தில் சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள்: மத்திய அமைச்சர் பார்வை

நாக்பூரில் விமானப்படை வீரர்கள் செய்த சாகசக் காட்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விமானப்படையினரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, ஹெலிகாப்டர் சாகசம், வான்குடை சாகசம் ஆகியன பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. 

Exit mobile version