ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூரை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 2-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி அபார வெற்றி பெற்றது.

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நேற்று  நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. மற்றும் ஜாம்ஷெட்பூர்  எப்.சி. அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா 7வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. மும்பை அணியின் வீரர் அமைன் செர்மேட்டி 60-வது நிமிடத்திலும், பித்யனந்தா சிங் 92வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இறுதியில், மும்பை சிட்டி எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Exit mobile version