நாளை அதிமுக பேரணி! பொதுச்செயலாளர் தலைமையில் தயாராகும் தொண்டர்படை!

விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து பல அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  மாதம் மாதம் ஒரு பிரச்சினை என்று போய் தற்போது வாரவாரம் ஒரு பிரச்சினை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சமூக சீர்கேடுகள், சட்டவிரோதமான பல நடவடிக்கைகள் எல்லாம் நடந்த வண்ணம் உள்ளது. ஆணவக்கொலைகள் அதிகரித்து விட்டது. கஞ்சா புழக்கம் பெருக்கெடுத்துவிட்டது. கள்ளச்சாராய உயிர்பலிகள் மலைபோல் எழும்பிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் மக்களுக்கு கஷ்டத்தையும் அச்சத்தையும் தரும் இந்த விடியா ஆட்சியின் லட்சணத்தையும் முறைகேடுகளையும் குறித்து ஆளுநரிடம் மனு ஒன்றினை அளிக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நாளை காலை பத்து இருபத்தைந்து மணியளவில் மாபெரும் பேரணி திரள உள்ளது.

கழகப் பொதுச்செயலாளரின் தலைமையில் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் குழுமி, அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலகம் வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்று கழக முக்கிய நிர்வாகிகள் மனுவினை ஆளுநருக்கு அளிக்க உள்ளனர். இதற்காக சென்னை முழுவதும் அதிமுகவின் தொண்டர்படை தயார் நிலையில் உள்ளது.

Exit mobile version