ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் இன்று ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும் ,அதிமுக அமைப்புச்செயலாளருமான பொன்னையன் இன்று ஆஜரானார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச்செயலாளருமான பொன்னையன் இன்று ஆஜரானர். ஜெயலலிதா மரணம் குறித்து அவர் கூறிய சில கருத்துகளின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் இன்று ஆஜராக உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஆஜராகி பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர், அவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆணையம் முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொந்த காரணங்களுக்காக ஆஜராக முடியாது என விசாரணை ஆணையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மறுபடியும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version