கஜா புயல் நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி

கஜா புயல் நிவாரணத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவ முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் நிதி அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கஜா புயல் நிவாரண நிதியாக அ.தி.மு.க. ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரிடம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Exit mobile version