அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்

தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேதி மாற்றம் வெளியிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Exit mobile version