திமுக அராஜகத்தினை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மாபெரும் பேரணி!

விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் உயிரிழப்புகள், முறைகேடுகள், அசம்பாவிதங்கள் போன்றவற்றினால் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுவிட்டது. இதனைக் கண்டித்தும், சமீபத்திய கள்ளச்சாராய உயிர்பலிகளைக் கண்டித்தும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வரும் திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்து மனு ஒன்றினை அளிக்க உள்ளார். முக்கியமாக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகைக்குள் செல்ல உள்ளார். அதனை ஒட்டி தலைமைக் கழகத்தில் இருந்து பொதுச்செயலாளர் அவர்களின் ஒப்புதலோடு அறிக்கை வெளியாகியுள்ளது.

 

Exit mobile version