ஆக்ராவில் உள்ள சுங்கசாவடிக்கு வந்த சுற்றுலா பேருந்து – ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

ஆக்ராவில் உள்ள சுங்கசாவடிக்கு வந்த சுற்றுலா பேருந்து ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பீகார் மாநிலம் முசாப்பர்பூரில் இருந்து டெல்லி நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 50 பேர் பயணம் செய்தனர். இந்தநிலையில், ஆக்ரா சுங்கசாவடி அருகே பேருந்து வந்த போது, தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பூ கடையின் மீதும், அங்கிருந்த காவல்துறையினரின் வாகனம் மற்றும் லாரி ஒன்றின் மீதும் மோதியது.

இந்த விபத்தில், பூ கடையின் உரிமையாளர் மற்றும் அவரது 13 வயது மகள் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து, சுற்றுலா பேருந்து ஒட்டுனர் மீது, அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒட்டுனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனால், சுற்றுலா வந்த பயணிகள், அனைவரும், சாலையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

 

Exit mobile version