தனியார் பல்கலைக்கழக கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

பொத்தேரி அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் விடுதியின் 9-வது மாடியில் இருந்து இன்று மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக் கழக கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அணுஷ் என்ற மாணவர் முதலாம் ஆண்டு ஈசி பாடப்பிரிவில் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று காலை விடுதி 9-வது மாடியில் இருந்து குதித்து அணுஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கல்லூரியில் நேற்று அனுப்பிரியா என்ற மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவர் ஒருவர் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இருவரின் மரணம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version