புதுக்கோட்டையில் 20 வருடங்களுக்கு பிறகு பள்ளி மாணவ, மாணவிகள் சந்திப்பு

புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மச்சுவாடியில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை நூறு மாணவ மாணவியர்கள் பயின்று வந்தனர். தற்போது அவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்பள்ளியில் முன்னாள் ஆசிரியரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா கலந்து கொண்டு சிறப்பித்த இந்த நிகழ்ச்சியில் 100 மரகன்றுகள் நடப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version