நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

நீர்நிலைகள், நீர்வழித் தடங்களை பாதுகாப்பது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீர் நிலைகள், நீர்வழித்தடங்களை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த கடந்த 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை ஒத்துழைக்கா விட்டால் ராணுவத்தை கொண்டு அகற்ற வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version