அரசு கேபிள் டி.வி.க்கு புதிய கேபிள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

அரசு கேபிள் டி.வி.க்கு புதிய கேபிள் அமைத்தல் மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் புதிதாக அரசு கேபிள்கள் அமைத்தல், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரசு கேபிள்கள் மற்றும் இணைப்புகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version