இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அதிமுக சார்பாக போட்டியிடும் கே.எஸ். தென்னரசு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் களத்தில் இறங்கி வாக்கு சேமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அவர்கள் கூறியதாவது, இன்று நாள் பிரம்ம முகூர்த்ததில் தொடங்கி இருக்கிறது. அதாவது செல்வமும் வெற்றியும் பெருகும் காலம் அது. அதுபோல இன்று வாக்கு சேகரிக்க தொடங்கியிருக்கும் எங்களுக்கும் வெற்றியே!. திண்டுக்கல் இடைத்தேர்தலில் எப்படி வென்றோமோ அதேபோல இந்தத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என்று கூறினார். மேலும் வருகின்ற வருங்கால சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அபார வெற்றி பெற்று தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகுவார் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவருடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.YouTube video player

Exit mobile version