தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக அமோக வெற்றிபெறும்

தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மதுரை வந்தார். அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, ராமநாதபுரம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமித் ஷா மீண்டும் மதுரை திரும்பினார். அப்போது அவரை இரண்டாவது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக அமோக வெற்றிபெறும் என்று கூறினார்.

Exit mobile version