சிறுபான்மையினரின் நலனை அதிமுக எப்போதும் விட்டுக்கொடுக்காது

சிறுபான்மையினரின் நலனை அதிமுக எப்போதும் விட்டுக் கொடுக்காது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று மானிய விலை ஸ்கூட்டர்களை வழங்கினார். இதனையடுத்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக தெரிவித்தார். சிறுபான்மையினரின் நலனை அதிமுக எப்போதும் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version