திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுகவினர் அஞ்சலி!

தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின்போது உயிரழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்கநாள் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளினாலும் கொண்டாடப்படும். அதனையொட்டி தற்போது திருச்சியில் உள்ள அதிமுகவினர் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

திருச்சியைச் சேர்ந்த  மொழிப்போர் தியாகிகளான கீழப்படூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் அருகே உள்ளன. இந்த நினைவிடத்தில் ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். இன்று திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை அருகே ஒன்று திரண்ட அதிமுகவினர் பின்னர் நடைபயணமாக மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்த அஞ்சலி செலுத்திய நிகழ்வில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version