புரட்சித் தலைவியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெரும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை இடிகரை பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. இடிகரை ஊராட்சி செயலாளர். பாபா சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சுருமான எஸ்.பி.வேலுமணி உட்பட திரளான பொதுமக்களும், கழக தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி எப்படி வெற்றி பெற்றது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் இல்லை என தெரிவித்தார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத திமுகவையும் அக்கட்சியின் எம்.பி.-க்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட வளர்ச்சிக்கு விடியா திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version