மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசும் நேரமானது குறைவாக தரப்படுகிறது. மேலும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் நாட்களானது அதிக நாட்களுக்கு நடக்கவேண்டும். அப்படி நடந்தால் தான் எதிர்க்கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளையும், கேள்விகளையும், வலியுறுத்தல்களையும் தொடர்ந்து செய்ய முடியும். அதற்காக மே 10 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்று கூறினோம். எப்போதுமே ஒரு பிரதான எதிர்க்கட்சியின் கேட்டுக்கொண்டால் அதனை ஆளுங்கட்சியினர் நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த விடியா திமுக அரசு எங்கள் பேச்சினைக் காதுகொடுத்து கேட்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என்று எஸ்பி வேலுமணி அவர்கள் தனது கருத்தை தெரிவித்தார்.
YouTube video player

Exit mobile version