News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

Web Team by Web Team
May 24, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”
Share on FacebookShare on Twitter

கொரோனா களப்பணியாளர்களை நீக்கி, தாங்கள் கூறும் நபர்களை பணியமர்த்துமாறு மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான அறிக்கையில்,  அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்க வேண்டும், அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள ஒ.பன்னீர்செல்வம், அரசுப் பணியில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்கு முற்றிலும் முரணாக திமுகவினரின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த்துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருவதால், சென்னையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அடையாறில், கொரோனா களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தாங்கள் கூறும் நபர்களை பணியில் அமர்த்தவேண்டும் என திமுகவினர் மிரட்டியதாகவும், இதற்கு அதிகாரிகள், கட்சியின் பரிந்துரையின் பேரில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்றும், திறம்பட பணியாற்றுபவர்களை மாற்றினால் நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைபிடித்தால், கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொய்வின்றி, தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்வதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: newsjஅதிமுகஓ.பன்னீர்செல்வம்திமுக
Previous Post

திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Next Post

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

Related Posts

rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
hindu muslim vinayakar procession
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

September 5, 2022
Next Post
`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ - அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

Discussion about this post

அண்மை செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

January 27, 2023
கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

January 27, 2023
2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist