கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்கு, அதிமுக சார்பில் அன்புக்கொடை

கிறிஸ்துவ கால சகோதர பகிர்தலை கொண்டாடும் வகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அன்புக் கொடை அனுப்பி வைக்கப்பட உள்ளது. கிறிஸ்துவ சமூகத்தினரின், சமூக தொண்டுகளையும், கல்வி, மருத்துவ அறப்பணிகளையும் பாராட்டி போற்றும் வகையில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கால சகோதர பகிர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும், கிறிஸ்தவ கால சகோதர பகிர்தலை கொண்டாடும் வகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்கு அன்புக் கொடை அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னிர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து வழி அனுப்பி வைக்கின்றனர். 19 ஆம் தேதி மாலை 5 மணியளவில் அன்புக் கொடையானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

Exit mobile version