அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அவர்களது அலுவலகமான கமலாலயத்தில் இன்று சந்தித்து ஆலோசித்தனர். குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.YouTube video player

பாஜகவின் அலுவலகம் அமைந்துள்ள சென்னை தியாகராயநகரில் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசணை நடத்தினார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுகவின் வெற்றிக்காக அவர்களின் ஆதரவினைத் திரட்டி வருகின்றனர். ஏற்கனவே, தமாகா தலைவர் ஜி.கே வாசன், தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் போன்றோர்கள் அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்க்ள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜகவினரை சந்தித்து ஆதரவு கோரிவருகின்றனர்.

Exit mobile version