அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் – பொதுச்செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!

கர்நாடாகவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டியும் அதிமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும்  அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவசர செயற்குழுக்கூட்டமானது வருகின்ற ஞாயிறு 16.04.2023 அன்று நடைபெற இருக்கிறது என்று கழகத்தின் பொதுச்செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இக்கூட்டமானது சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர் மாளிகைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் உள்ளது. கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் நிச்சயம் கலந்துகொள்ளுமாறு அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version