அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..ஆலோசனை வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர்!

விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை, பட்டிதொட்டி எங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.Image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்களும், பிற மாநில கழக செயலாளர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்தும், விடியா திமுக அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை பட்டி தொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும், கழக இடைக்கால பொதுச்செயலாளர் விரிவாக ஆலோசனை வழங்கினார்.

Exit mobile version