ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகள் டிச. 18, 19, 20 தேதிகளில் நடைபெறும்

கஜா புயலால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கஜா புயலால் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதங்களை சந்தித்துள்ளன.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் முறையே வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற கணித தேர்வின் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த தேர்வு வரும் 12ஆம் தேதி மீண்டும் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version