போரூர் அருகே கார்கள் தீப்பிடித்து எரிந்த இடத்தில் கூடுதல் ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை போரூர் அருகே தனியார் கால் டாக்சிக்கு சொந்தமான கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போரூர் அருகே தனியார் கால் டாக்சிக்கு சொந்தமான 184 கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்தால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் கூடுதல் கமிஷ்னர் தினகரன், அம்பத்தூர் இணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீ விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அல்லது எதிர்பாராத வகையில் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version