இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக பேட்டி – நடிகை ரேவதி மீது போலீசில் புகார்

இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக பேட்டியளித்த நடிகை ரேவதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ரேவதி, மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதான இளம் நடிகை தன் அறையின் கதவை தட்டி தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுததாகவும் கூறினார்.

இந்நிலையில் கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர், எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் இளம் நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதை மூடி மறைத்த ரேவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இளம் நடிகையை பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை ரேவதி, அந்த நடிகை நள்ளிரவில் கதவை தட்டி தன்னை காப்பாற்றுமாறு கூறியது உண்மை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை வலியுறுத்த இந்தத் தகவலை தெரிவித்தாக கூறினார்.

Exit mobile version